நாட்டிலுள்ள வைத்தியசாலைகளில் மருந்து தட்டுப்பாடு அதிகரித்து வருவதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) தெரிவித்துள்ளது.
கொழும்பு தேசிய வைத்தியசாலை மற்றும் தேசிய புற்றுநோய் வைத்தியசாலைகள் இந்த பற்றாக்குறையால் முடங்கியுள்ளதாக அதன் பேச்சாளர் வைத்தியர் சமில் விஜேசிங்க தெரிவித்தார்.
இந்த பற்றாக்குறையால் நாளாந்த மருத்துவமனை நடவடிக்கைகளில் ஈடுபடுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும் பேச்சாளர் தெரிவித்தார்.

இதற்கு பதிலளித்த சுகாதார செயலாளர் ஜனக சந்திரகுப்த,
மருந்துப் பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுகின்ற போதிலும், வைத்தியசாலை நடவடிக்கைகளுக்கு அது பாதிப்பை ஏற்படுத்தவில்லை, பற்றாக்குறையாக உள்ள மருந்துகளை கொள்வனவு செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
புற்று நோயாளர்களின் சிகிச்சைக்கு அத்தியாவசியமான 15 மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக மஹரகம அபேக்ஷா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் அருண ஜயசேகர தெரிவித்துள்ளார்.
பெரும்பாலான மருந்துகள் நன்கொடையாளர்களால் வழங்கப்படுகின்றன, பற்றாக்குறையாக உள்ள ஏனைய மருந்துகள் உள்ளூர் விநியோகஸ்த்தர்களிடமிருந்து பெறப்படுகின்றன என்றும் அவர் தெரிவித்தார்.
பிற செய்திகள்