அராலியில் பனை முறிந்து விழுந்து மின்சார வயர் துண்டிப்பு…!

அராலி மத்தி பகுதியில் உள்ள காணி ஒன்றிலிருந்த பனைமரம், இன்று மதியம் வீசிய காற்றால் முறிந்து மின்சார வயரின் மீது விழுந்துள்ளது. இதனால் மின்சார வயர் அறுந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து இலங்கை மின்சார சபையின் வட்டுக்கோட்டை அலுவலகத்திற்கு தகவல் வழங்கப்பட்டது.

அதனடிப்படையில், குறித்த இடத்திற்கு வருகைதந்த மின்சார சபையினர் மின்னிணைப்பைச் சரிசெய்து சென்றனர். எனினும் சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *