IMF இன் உடன் கலந்துரையாடுவதற்காக இலங்கை பிரதிநிதிகள் குழு அமெரிக்காவுக்கு செல்கிறது

சர்வதேச நாணய நிதியத்தின் உத்தேச கடன் வசதிகள் தொடர்பாக அதன் அதிகாரிகளுடன் கலந்துரையாடுவதற்காக இலங்கை பிரதிநிதிகள் குழுவொன்று அமெரிக்கா செல்லவுள்ளது.

அடுத்த மாதம் 6ஆம் திகதி அமெரிக்காவின் வொஷிங்டனுக்குச் செல்லும் அவர்கள், அங்கு மேலதிக கலந்துரையாடல்களை மேற்கொள்ளவுள்ளனர்.

இந்த கலந்துரையாடலில் மத்திய வங்கியின் ஆளுநர் உள்ளிட்ட அரசாங்க பிரதிநிதிகள் கலந்துகொள்ளவுள்ளனர்.

வெளிநாட்டு கையிருப்பு குறைப்பு உட்பட பல பொருளாதார சவால்களை எதிர்கொண்டுள்ள இலங்கை, 2.9 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கான நீண்டகால கடன் வசதிக்கான பணியாளர் மட்ட உடன்பாட்டை ஏற்கனவே எட்டியுள்ளது.

இத்தொகை 04 வருட காலப்பகுதியில் எட்டு தவணைகளாக இலங்கைக்கு வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த ஆண்டு ஏப்ரல் 12ஆம் திகதியிலிருந்து தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ள வெளிநாட்டுக் கடனை செலுத்துவது தொடர்பான மறுசீரமைப்பு வேலைத்திட்டத்தின் உடன்படிக்கைகள் மற்றும் முன்னேற்றம் குறித்தும் இந்தக் கூட்டத்தில் கலந்துரையாடப்படவுள்ளது.

Leave a Reply