கிரேக்கத்தில் கொவிட்-19 தொற்றினால் மொத்தமாக நான்கு இலட்சத்து 50ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குணமடைவு!

கிரேக்கத்தில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்தமாக நான்கு இலட்சத்து 50ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர்.

அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, கிரேக்கத்தில் மொத்தமாக நான்கு இலட்சத்து 50ஆயிரத்து 533பேர் குணமடைந்துள்ளனர்.

உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 48ஆவது நாடாக விளங்கும் கிரேக்கத்தில் இதுவரை நான்கு இலட்சத்து 94ஆயிரத்து 907பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 12ஆயிரத்து 970பேர் உயிரிழந்துள்ளனர்.

கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால், ஆயிரத்து 603பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு 10பேர் உயிரிழந்துள்ளனர்.

அத்துடன் இதுவரை வைரஸ் தொற்றிலிருந்து மொத்தமாக 31ஆயிரத்து 424பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 176பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *