நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் கொடிச்சீலைக்கான காளாஞ்சி கையளிக்கும் நிகழ்வு

<!–

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் கொடிச்சீலைக்கான காளாஞ்சி கையளிக்கும் நிகழ்வு – Athavan News

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்தப் பெருந்திருவிழாவை முன்னிட்டு, இன்றைய தினம் (செவ்வாய்க்கிழமை) கொடிச்சீலை வடிவமைப்பாளர்களிடம் காளாஞ்சி கையளிக்கும் நிகழ்வு  இடம்பெற்றது.

வள்ளியம்மை திருக்கல்யாணப் படிப்புடன் பந்தற்கால் நாட்டுதல் இடம்பெற்று, பாரம்பரிய முறைப்படி கொடிச்சீலை வழங்கும் மரபுடையவர்களிற்கான காளாஞ்சி, மாட்டுவண்டியின் ஊடாக நல்லூரிலிருந்து கல்வியங்காட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டு ,கலாச்சார முறைப்படி பெருந்திருவிழாவுக்கான பத்திரிகை மற்றும் காளாஞ்சி கையளிக்கப்பட்டன.

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்தப் பெருந்திருவிழா எதிர்வரும் 13 ஆம் திகதி,  கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளதாக ஆலய நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *