முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு கமநல சேவை நிலையத்திற்குட்பட்ட சிறாட்டிகுளம் மற்றும் நட்டாங்கண்டல் பகுதிகளில் பெரும்போக நெற்செய்கையில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கான திண்ம மற்றும் திரவ சேதன உரம் வழங்கும் நிகழ்வு மாந்தை கிழக்கு கமநல சேவை நிலையத்தில் முன்னெடுக்கப்பட்டது.
அந்த வகையிலே மாந்தை கிழக்கு கமநல சேவை நிலையத்திற்கு உட்பட்ட சிறாட்டிகுளம் பகுதியில் செய்கை பண்ணப்பட்ட 377 ஏக்கர் வயல் நிலங்களுக்கும் நட்டாங்கண்டல் பகுதியில் செய்கை பண்ணப்பட்ட 311.25ஏக்கர் நிலங்களுக்குமான பசளை விநியோகமே இன்றைய தினம் வழங்கப்பட்டது
ஏக்கருக்கு 80 கிலோ கிராம் சேதன பசளையும் யூரியா 21கிலோ கிராமும் வழங்கப்பட்டன
இதே வேளை திரவ உரமான எக்கோபிற்றா ஏக்கருக்கு 3லீற்றரும் வழங்கப்பட்டன
மாந்தை கிழக்கு கமநல சேவையின் அபிவிருத்தி உத்தியோகத்தர் தனபாலசிங்கம் குணாளன் தலைமையில் கமநல சேவை நிலைய ஊழியர்கள் விவசாயிகளுக்கான பசளை விநியோகத்தில் ஈடுபட்டனர்