முகமாலை பகுதியில் கஞ்சாவுடன் இருவர் கைது!

பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முகமாலை பகுதியில் வைத்து 29கிலோ 150 கிராம் கஞ்சாவுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழில் இருந்து கிளிநொச்சி நோக்கி கப்ரக வாகனத்தில் கங்சா ஏற்றி வருவதாக பளை பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து முகமாலை பகுதிதியில் வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் குறித்த சந்தேக நபர்களை இன்று (சனிக்கிழமை) கிளிநொச்சி மாவட்ட நீதவான் முன்னிலையில் முற்படுத்தவுள்ளதாக பளை பொலிசார் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *