கொழும்பு,நவ 27
ஒரு வாரத்திற்குள் முட்டை விற்பனை செய்யக்கூடிய முறையான விலையை கணக்கிட்டு வழங்க அரசாங்க நிதி பற்றிய குழு வர்த்தக அமைச்சின் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.
இலங்கைக்கு கோழித் தீவனத்தை இறக்குமதி செய்வது தொடர்பாக 1969 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க இறக்குமதி மற்றும் ஏற்றுமதிச் சட்டத்தின் கீழ் உள்ள விதிமுறைகளை கருத்தில் கொண்டு தற்போதைய விலையில் முட்டையை விற்பனை செய்யலாம் எனவும், எனினும் சரியான விலையை கணக்கிட வேண்டியதன் அவசியம் தொடர்பில் அரசாங்க நிதி தொடர்பான குழுவின் தலைவர் ஹர்ஷ டி சில்வா வலியுறுத்தினார்.
இதேவேளை, சந்தையில் முட்டை விலையை மீளாய்வு செய்வது தொடர்பில் இதுவரை எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
கம்பஹாவில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.