கடந்த வருடம் ஒக்டோபர் மாதத்துடன் ஒப்பிடுகையில் இந்த வருடம் ஒக்டோபர் மாதத்தில் வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்கள் அனுப்பிய பணத்தின் அளவு அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் மூலமாக 317.4 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கிடைத்துள்ளதுடன் இந்த வருடம் ஒக்டோபர் மாதத்தில் 355.4 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கிடைத்துள்ளது .