இலங்கையில் உள்ள தலசீமியா நோயாளர்களுக்கு தேவையான மருந்துகளை 6 மாதங்களுக்கு ஒருமுறை வழங்க பாலஸ்தீன் அரசாங்கம் முன்வந்துள்ளது.
அந்த நாட்டின் முன்னணி நிறுவனம் ஒன்றின் ஊடாக தலசீமியா நோயாளர்களுக்கு குறித்த மருந்துப்பொருட்கள் வழங்கப்படவுள்ளன.
இதற்கமைய, அதன் முதல் தொகுதி அண்மையில் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவிடம் உத்தியோகப்பூர்வமாக கையளிக்கப்பட்டிருந்தது.