யாழில் ஊசி மூலம் ஹெரோயின் பயன்படுத்திய 15 வயது மாணவன் உயிரிழப்பு

ஊசி மூலம் உயிர்கொல்லி ஹெரோயின் போதைப் பொருளை பயன்படுத்திய 15 வயது பாடசாலை மாணவன் ஒருவன் மூளை மற்றும் இதயத்தில் கிருமி தொற்று ஏற்பட்டு நேற்று உயிரிழந்துள்ளார்.

குறித்த மாணவனுடன் சேர்த்து இந்த ஆண்டு 13 பேர் உயிர்கொல்லி ஹெரோயினை பயன்படுத்தி உயிரிழந்துள்ளனர்.

கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வசிக்கும் 15 வயது மாணவன் கடும் காய்ச்சல் காரணமாக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் கடந்த வாரம் சேர்க்கப்பட்டுள்ளார். அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை வழங்கப்பட்ட போதும் நேற்று அந்த மாணவன் உயிரிழந்துள்ளார்.

மாணவனின் சடலத்தை நீதிவான் நேற்று நேரில் சென்று பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டார். உயிர்கொல்லி ஹீரோயினை ஊசிமூலம் இந்த மாணவன் பயன்படுத்தியமை விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *