யாழ். மத்திய கல்லூரிக்கு அருகில் போக்குவரத்து தொடர்பில் விழிப்புணர்வு!

<!–

யாழ். மத்திய கல்லூரிக்கு அருகில் போக்குவரத்து தொடர்பில் விழிப்புணர்வு! – Athavan News

யாழ். பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் பாடசாலைக்கு அருகில் போக்குவரத்து கடமையில் மாணவர்கள் ஈடுபடுவது தொடர்பில் விழிப்புணர்வு செயற்பாடு பொலிசாரினால் முன்னெடுக்கப்பட்டது.

அந்நிலையில் இன்று (செவ்வாய்க்கிழமை) யாழ். மத்திய கல்லூரிக்கு அருகில் போக்குவரத்து கடமையில் ஈடுபடும் மாணவர்களுக்கான விசேட பயிற்சியும் போக்குவரத்து காப்பாளர் அங்கி வழங்கி வைக்கும் நிகழ்வும் கல்லூரி மைதானத்தில் இடம்பெற்றது.

குறித்த நிகழ்வு யாழ். பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையில் இடம்பெற்றதோடு போக்குவரத்து விதிமுறைகள் சம்பந்தமான விழிப்புணர்வும் முன்னெடுக்கப்பட்டிருந்தது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *