இலங்கையில் பிறக்கும் குழந்தைகளில் ஏற்பட்டட மாற்றம் – அதிர்ச்சியில் மருத்துவர்கள்

குடும்ப சுகாதார சேவைகள் பணியகத்தின் தரவு அறிக்கைகளின்படி, குறைந்த எடையுடன் பிறந்த குழந்தைகளின் சதவீதம் கடந்த மாதம் வரை  15.6  புள்ளியாக ஆக காணப்படுகிறது.

கடந்த ஜனவரியில் இருந்து இது குறிப்பிடத்தக்க அதிகரிப்பு என்று குடும்ப சுகாதார பணியகத்தின் தரவு அறிக்கைகள் காட்டுகின்றன. கடந்த ஜனவரி மாத நிலவரப்படி, குழந்தைகளின் பிறப்பு எடை குறைவு  11.7  புள்ளியாக காணப்பட்டது.

தாயின் ஊட்டச்சத்து குறைபாடு, கர்ப்ப காலத்தில் தாய் போதைப்பொருளுக்கு அதிக அடிமையாக இருப்பது, கர்ப்ப காலத்தில் புகைபிடிக்கும் இடங்களில் சுற்றித் திரிவது, கர்ப்ப காலத்தில் மிகவும் கவலையாக இருப்பது, பிரசவத்திற்கு முந்தைய ரத்தக்கசிவு போன்ற காரணங்களால் எடை குறைந்த குழந்தைகள் பிறக்கின்றன என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

குறைந்த எடையுடன் பிறக்கும் குழந்தைகளுக்கு சாதாரண குழந்தையை பராமரிப்பதை விட அதிக கவனம் செலுத்த வேண்டும் என்றும், அவர்களுக்கு தொடர்ந்து தாய்ப்பால் கொடுப்பது அவசியம் என்றும் மருத்துவர்கள் வலியுறுத்துகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *