பாடசாலை மாணவர்களுக்காக கொப்பி ,பென்சில்,பேனை,அழிப்பான் விலைகள் குறைக்கப்படுகிறது ?

இறக்குமதியாளர்கள் மற்றும் உள்ளூர் உற்பத்தியாளர்களுடன் பாடசாலை உபகரணங்கள் மற்றும் எழுதுபொருட்களின் விலைகளைக் குறைப்பது தொடர்பில் கலந்துரையாடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வர்த்தகம் மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் கலந்துரையாடி அறிக்கை சமர்ப்பிக்குமாறு நுகர்வோர் விவகார அதிகார சபைக்கு அறிவித்துள்ளதாக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமைக்கு அமைய அலுவலக எழுதுபொருட்களின் விலையும் தாறுமாறாக உயர்ந்து வருவதாக அகில இலங்கை தொடர்பாடல் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் இந்திரஜித் பெரேரா தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *