நான் பண்டாரநாயக்கவின் கொள்ளைகளை ஏற்று பணியாற்றுகின்றேன்-முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க

நான் ஐக்கியதேசிய கட்சியில் அல்லது ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்துகொள்ள மாட்டேன் என மீண்டும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தெரிவித்துள்ளார் .

முகநூல் பதிவொன்றில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர் “நான் ஸ்ரீலங்கா சுதந்திரகட்சியிலேயே பிறந்தேன் அந்த கட்சியிலேயே வளர்ந்தேன் இறுதி வரை அந்த கட்சியிலேயே இருப்பேன்

இன்று பல தவறான கொள்கைகளை பின்பற்றியதால் இன்று ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி பலவீனமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது

ஆகவே நான் பண்டாரநாயக்கவின் கொள்ளைகளை பாராட்டுகின்றேன் அந்த கொள்கையை ஏற்று தெளிவான கொள்கை அடிப்படையில் நான் பணியாற்றுகின்றேன்

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தற்போதைய தலைவர்கள் தங்கள் குறுகிய நோக்கங்களிற்காக கட்சியின் கொள்கைகளிற்கு துரோகமிழைக்கின்றனர்” எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *