தையல் பயிற்சி நிலையம் திறந்து வைப்பு

அல்ஹித்மத்துல் உம்மா பௌண்டேசனின் தலைவர் கஸ்ஸாலி முகமட் பாத்திஹ்    தலைமையில் பெண்களுக்கான தொழில் முயற்சியை ஊக்குவிக்கும் நோக்கில்  அல்ஹித்மதுல் உம்மா பௌண்டேசன் தலைமைக் காரியாலய வளாகத்தில் தையல் பயிற்சி நிலையம்தற்போது  திறந்து வைக்கப்பட்டது.

இப்பயிற்சி நிலையத்திற்கு கஸ்ஸாலி முகமட் பாத்திஹ் இன்  வேண்டுகோளுக்கு அமைய கிண்ணியா பிரதேச செயலகம் பயனாளிகளை வழங்கி தனது பங்களிப்பை நல்கி இருந்தது.

 நிகழ்வில் உரை நிகழ்த்திய அல்ஹித்மத்துல் உம்மா பௌண்டேசனின் தலைவர் கஸ்ஸாலி முகமட் பாத்திஹ்:

 இப்பயிற்சி நிலையத்தில் பயிற்சியை முடித்து வெளியேறும் யுவதிகளுக்கு அன்பளிப்பாக ஒரு தையல் மெசின் வழங்கப்பட்டு அவர்கள் வீட்டில் இருந்து ஆடைகளைத் தைத்து வழங்கும்போது அந்த ஆடைகளை சர்வதேச சந்தையில் சந்தைப்படுத்தி யுவதிகளுக்கான சிறந்த வாய்ப்பை உருவாக்கித்தர முடியும் எனத்  தெரிவித்தார்.

இப்பயிற்சி நிலைய திறப்பு விழாவில் IHHNL அமைப்பின் பிரதிநிதியான துருக்கியில் இருந்து வருகை தந்திருக்கும் யாசின்   பிரதம அதிதியாக கலந்து கொண்டு சிறப்பித்தார்.

 நிகழ்வில் கிண்ணியா பிரதேச செயலாளர் எம்.எச்.எம்.கனி,பிரதி திட்டமிடல் பணிப்பாளர் ஐ.முஜீப் ஆகியோருடன் இன்னும் பல பிரமுகர்களும் கலந்து சிறப்பித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *