யாழ் பல்கலைக் கழக மாணவிகளுக்கு அந்தரங்க உறுப்பை காட்டும் இளைஞர்கள் – 300 மாணவிகள் செய்த செயல்

யாழ்ப்பாண  பல்கலைக்கழகத்தின் கொக்குவிலில் உள்ள பெண்கள் விடுதி ,மற்றும் வாடகை அறைகளில் தங்கி உள்ள மாணவிகள் பல்கலைக்கழகத்திற்கு காலையிலும் மாலையிலும் வீதியால் செல்லுகின்ற பொழுது சில ஆசாமிகள் பாலியல் தொல்லை  கொடுப்பதாக கோப்பாய்  பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

 இது தொடர்பில் பல்கலைக்கழக நிர்வாகத்துக்கு  கடந்த மாதம் 300 மாணவிகளின் கையெழுத்துடன் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.அத்துடன்  மாணவிகள் மீதான பாலியல் தொல்லை தொடர்பில்  பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

 யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பின்புற வீதி ஊடாக விடுதிக்குச் செல்லுகின்ற மற்றும் அந்தப் பகுதியில் உள்ள வாடகை விடுதிக்கு செல்லும் மாணவிகளையும் இலக்கு வைத்து ஆசாமிகள் , தமது  அந்தரங்க உறுப்புகளை காட்டுவதுடன் மிக மோசமான ஆபாச வார்த்தைகளால் வசை பாடுவதாகவும் மாணவிகள் தமது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளனர்.

 பல்கலைக்கழகத்துடன்  தொடர்பு படாத இளைஞர்களை இவ்வாறான செயற்பாட்டை தொடர்ந்து முன்னெடுத்து வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

 நேற்றுக்  காலை மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் மாணவிகள் இருவரை அழைத்து ஆபாச வார்த்தைகளால் பேசியுள்ளனர், என்று தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பில் மோட்டார் சைக்கிளின் இலக்கத்துடன்  முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *