முக்கிய இராஜதந்திரிகளை சந்தித்த ஜனாதிபதி!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (06) காலை இலங்கையுள்ள மிக முக்கிய நாடுகளின் தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்களை சந்தித்துள்ளார்.

பிரித்தானிய உயர்ஸ்தானிகர், ஜப்பானிய தூதுவர், அமெரிக்க தூதுவர், இந்திய உயர்ஸ்தானிகர் மற்றும் அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் ஆகியோர் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர்.

இந்த சந்திப்பில் இருதரப்பு அபிவிருத்தி ஒத்துழைப்பு தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் இராஜதந்திர பிரதிநிதிகளுக்கும் இடையில் கருத்துப் பரிமாற்றம் இடம்பெற்றதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *