மூன்று பிள்ளைகளின் தாயார்இ கணவரின் நண்பனுக்காக தற்கொலை முயற்சி- மட்டக்களப்பில் சம்பவம்!

போலீஸ் நிலைய அதிகாரி மற்றும் 3 பிள்ளைகளின் தாயார் தனது கணவரின் நண்பனுக்காக கழுத்தை அறுத்து சம்பவம் ஒன்று வாழை சேனை பகுதியில் பதிவாகியுள்ளது.

அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த 33 வயதுடைய பொலிஸ்கான்ஸ்டபிள்  மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பொலிஸ் நிலையம் ஒன்றில்  கடமையாற்றி வந்தபோது அதே பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்த 3 பிள்ளைகளின் தந்தையான பொலிஸ்கான்ஸ்டபிளுடன் நட்பு ஏற்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து அவருடைய மட்டக்களப்பு பிரதேசத்தில் உள்ள வீட்டிற்கு சென்று வந்த நிலையில் அவரது 38 வயதுடைய மனைவியுடன் அவருக்கு நட்பு ஏற்பட்டது.

நண்பனின் மனைவியுடன் ஏற்பட்ட நட்பு இருவருக்கும் இடையே காலப்போக்கில் அது காதலாக மாறியுள்ளது.

குறித்த பொலிஸ்கான்டபிள் வாழைச்சேனை பொலிஸ் நிலையத்திற்கு இடமாற்றம் பெற்று அங்கு கடமையாற்றி வந்துள்ள நிலையில் குறித்த தாய் அங்கு காதலனை தேடிச் சென்று தன்னை திருமணம் முடிக்குமாறு அடிக்கடி தொந்தரவு செய்துள்ளார்.

அதற்கு பொலிஸ்கான்டபிள்  மறுப்பு தெரிவித்து வந்ததையடுத்து காதலனை தேடி அடிக்கடி பொலிஸ் நிலையத்துக்கு சென்று திருமணம் முடிக்குமாறு தொடர்சியாக தொந்தரவு கொடுத்து வந்துள்ளார்.

இந்த நிலையில் சம்பவ தினம் இரவு 7 மணியளவில் குறித்த தாயார் பொலிஸ் நிலையத்துக்கு சென்று பொலிஸ்கான்ஸ்டபிளுக்கு தொந்தரவு கொடுத்த நிலையில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி இருவரையம் கூப்பிட்டு விசாரித்துவிட்டு வெளியே செல்லுமாறு தெரிவித்ததையடுத்து அங்கிருந்து இருவரும் வெளியே வந்தபோது திடீரென குறித்த தாய் தான் கொண்டுவந்த பிளேற்றினால் தனது கழுத்தை அறுத்து தற்கொலை செய்ய முயற்சித்த நிலையில் படுகாயமடைந்ததையடுத்து,

அவரை வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  

இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *