நாட்டில் கடந்த 3 தினங்களில் மாத்திரம் அஸ்ட்ராசெனெகா தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் ஒரு இலட்சத்து 16 ஆயிரத்து 664 பேருக்கு செலுத்தப்பட்டுள்ளன.
இந்த விடயம் தொடர்பாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசும தெரிவித்துள்ளார்.
அதேநேரம், இதுவரையில் அஸ்ட்ராசெனெகா தடுப்பூசியின் இரண்டாவது டோஸைப் பெறாதோர், உடனடியாக தடுப்பூசி மையங்களுக்கு சென்று அதனை பெற்றுக்கொள்ளுமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.