லைக்கா ஜப்னா கிங்ஸ் அணிக்கு மற்றுமொரு இலகு வெற்றி!

லங்கா பிரீமியர் லீக் ரி-20 தொடரின் மூன்றாவது லீக் போட்டியில், லைக்கா ஜப்னா கிங்ஸ் அணி 09 விக்கட்டுக்களினால் வெற்றி பெற்றுள்ளது.

ஹம்பாந்தோட்டையில் நடைபெற்ற இந்த போட்டியில், லைக்கா ஜப்னா கிங்ஸ் அணியும், Dambulla Aura அணியும் பலப்பரீட்சை நடாத்தின.

இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற Dambulla Aura அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய அந்த அணி 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கட்டுக்களை இழந்து 121 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

அணி சார்பில் Jordan Cox அதிகபட்சமாக 43 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்திருந்தார்.

லைக்கா ஜப்னா கிங்ஸ் அணி சார்பில் விஜயகாந்த விஜாஸ்காந்த் மற்றும் மகேஷ் தீக்ஷன ஆகியோர் தலா மூன்று விக்கட்டுக்களை வீழ்த்தியிருந்தனர்.

இதனைத் தொடர்ந்து 122 என்ற வெற்றியிலக்கினை நோக்கி துடுப்பெடுத்தாட களமிறங்கிய லைக்கா ஜப்னா கிங்ஸ் அணி 15.4 ஓவர்கள் நிறைவில் ஒரு விக்கட்டினை இழந்து 09 விக்கட்டுக்களினால் வெற்றி பெற்றுள்ளது.

லைக்கா ஜப்னா கிங்ஸ் அணி தொடர்ச்சியாக லங்கா பிரீமியர் லீக் ரி-20 தொடரின் இரண்டாவது போட்டியிலும்  வெற்றி பெற்றுள்ளது என்பதுக் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *