யாழ்., கொழும்பு வாழ் மக்களுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து..!

தற்போது நிலவும் காற்றுடன் கூடிய காலநிலையுடன் கொழும்பு உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளில் வளிமண்டலத்தில் தூசி துகள்களின் அளவு அதிகரித்துள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் சுற்றாடல் திணைக்களத்தின் பணிப்பாளர் சரத் பிரேமசிறி தெரிவித்துள்ளார்.

கொழும்பு நகரில் நிலவும் பனிமூட்டமான சூழல் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பு, கண்டி, யாழ்ப்பாணம் மற்றும் புத்தளம் ஆகிய நகரங்களில் இந்த நிலை அதிகமாக காணப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த ஆண்டு நவம்பர் முதல் மார்ச் வரை வளிமண்டலத்தில் தூசி துகள்களின் அளவு அதிகரிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *