செம்மலை பகுதியில் கடல் நீர்மட்டம் அதிகரித்து கிராமத்திற்குள் நீர் புகும் அபாயம்!

முல்லைத்தீவு செம்மலை பகுதியில் கடல் நீர்மட்டம் அதிகரித்து கிராமத்திற்குள் நீர் புகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

தாழமுக்கம் சூறாவளியாக மாற்றம் பெற்று நகரும் நிலையில் கடல்நீர்மட்டம் அதிகரித்துள்ளது. இதனால் கரையை கடந்து நீர் கிராமத்தை நோக்கி செல்ல ஆரம்பித்துள்ளது.

இதனால் மீனவர்களின் தொழில் முற்றுமுழுதாகவே பாதிக்கப்பட்டுள்ளது. மீனவர்கள் தங்கள் படகுகளை பாதுகாப்பான இடங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்தும் பனிமூட்டம் காணப்படுவதனால் வாகன போக்குவரத்துகள் கூட நேரகாலத்துக்கு செல்ல முடியாமல் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *