பதுளை பசறை பகுதிகளில் பலத்த காற்று ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக பல இடங்களில் மின்சார தடை ஏற்பட்டுள்ளது.
குடியிருப்புகளில் கூரைத்தகடுகள் அள்ளுண்டு செல்லப்பட்டுள்ளன.
பசறை – நமுனுகுல பிரதான வீதி, பிலகம – பசறை வீதிகளில் மரங்கள் முறிந்து விழுந்தமையால் போக்குவரத்து தடை ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு வீதியில் விழுந்த மரங்களை அகற்றும் பணிகளை போலீசார் மற்றும் பிரதேச மக்கள் இணைந்து அகற்றும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். 

