சிறைச்சாலை கைதிகளிடம் இருந்து தொலைபேசிகள் மீட்பு!!

சிறை தண்டனை உட்பட்டவர்களை வைத்துள்ள பூஸா உயர் பாதுகாப்பு சிறைச்சாலைகளில் இருந்து ஐந்து கையடக்க தொலைபேசிகள் மற்றும் அதற்கான சார்ஜர்கள், ஐந்து சிம்கார்டுகள் உள்ளிட்ட பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக குறித்த சிறைச்சாலையின் திணைக்களம் தெரிவித்துள்ளது.

சிறைச்சாலை அத்தியட்சகருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பிரகாரம் சிறைச்சாலையில் விசேட பிரிவின் நுழைவாயிலுக்கு அருகாமையில் பூமிக்கு அடியில் புதைத்து வைத்த நிலையில் குறித்த தொலைபேசிகள் மற்றும் அதற்குரிய சாதனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக தகவல்களை குறித்த சிறைச்சாலையின் அத்தியட்சகர் உள்ளிட்ட அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *