கடந்த இரு தினங்களாக நிலவும் சீறற்ற காலநிலை காரணமாக திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் – போக்குவரத்துக்கு சாலைக்கு முன்னாள் உள்ள கடற்கரையில் கடல் அரிப்பு ஏற்பட்டுள்ளது.
இதன் போது குறித்த கடற்கரையில் இருந்த இரண்டு மரங்கள் முறிந்து விழுந்துள்ளன. பழுதடைந்த நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மூதூர் சாலைக்கு சொந்தமான பேருந்தின் மீது மரமொன்று சாய்ந்து வீழ்ந்துள்ளது.
அத்தோடு மரம் முறிந்து விழுந்தமையின் காரணமாக ரெலிக்கோம் நிறுவனத்திற்கு சொந்தமான கம்பம் ஒன்றும் அதன் வயரும் அறுந்து வீழ்ந்து காணப்படுகிறது.
முறிந்து விழுந்த மரங்களை அப்புறப்படுத்தும் நடவடிக்கையில் மூதூர் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் ஊழியர்கள் ஈடுபட்டுவருவதையும் அவதானிக்க கூடியதாக உள்ளது.

JJ SRI LANKA TAMIL NEWS
24*7 TAMIL NEWS IN SRI LANKA

JJ SRI LANKA TAMIL NEWS
24*7 TAMIL NEWS IN SRI LANKA
