
பதுளை, பசறை, நுணுகலை உள்ளிட்ட தோட்ட பகுதிகளில் நேற்று இரவு முதல் திடீரென வீசி வரும் பலத்த காற்று காரணமாக பல குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உடனடியாக உதவிகளை வழங்குமாறு மாவட்ட அதிபருக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் பணிபுரை விடுத்துள்ளார்.
வீடுகளுக்கு ஏற்பட்டுள்ள சேதம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களை மாற்று இடங்களில் தங்க வைப்பதுடன் அவர்களுக்கான உலர் உணவுகளை வழங்க நடவடிக்கைகளும் மேற்கொள்வதோடு, சேதமடைந்த வீடுகளை சீரமைத்து தருவதற்கும் நடவடிக்கை எடுக்குமாறு அவர் பணித்துள்ளார்.
அத்துடன் இப்பகுதியில் உள்ள பாடசாலைகளுக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும் மாணவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு பாடசாலைகளை தீர்த்துவதற்கான உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு மாகாண செயலாளருக்கு பணிபுரை வழங்கியுள்ளார், என்பது குறிப்பிடத்தக்கது.