கசினோவிற்கு கிடைத்தது அனுமதி!

கசினோ வர்த்தக ஒழுங்குப்படுத்தல் சட்டம் கடுமையான நிபந்தனைகளின் அடிப்படையில் நிறைவேற்றப்பட்டதாக பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் இன்று (டிச.8) கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

2023ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 30ஆம் திகதி நாட்டில் கசினோக்களை ஒழுங்குபடுத்தும் வகையில், கசினோ ஒழுங்குப்படுத்தல் முகவர் நிலையம் ஒன்று ஸ்தாபிக்கப்படும் என்ற வாக்குறுதியின் பேரில் அரசாங்கத்தின் நலன்களுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாக ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *