பாடசாலை மட்டத்தில் விஞ்ஞான கல்வியை வலுப்படுத்த நடவடிக்கை!

யாழ்ப்பாண சமூக விஞ்ஞானச் சங்கமானது, இந்த பிராந்தியத்தில் தேசிய மட்டத்தில் விஞ்ஞானம் தொடர்பிலான அறிவை மக்கள் மத்தியிலும் மாணவர் மத்தியிலும், அறிவாளர்கள் மத்தியிலும் கொண்டு செல்வதற்கான ஒரு அமைப்பாக ஆரம்பிக்கப்பட்டதாகும். இந்த யாழ்ப்பாண சமூக விஞ்ஞானச் சங்கம் 4 பிரிவுகளைக் கொண்டுள்ளது என மருத்துவ பீடாதிபதி பேராசிரியர் R.சுரேந்திரக் குமரன் தெரிவித்தார்.

இந்த சங்கத்தின்  முக்கிய பங்காக, பாடசாலை மட்டத்தில் விஞ்ஞான கல்வியைக் கொண்டு சேர்த்து, விஞ்ஞான கல்வியில் மாணவர்களை ஆர்வம் உடையவர்களாக மாற்றி அதனூடாக விஞ்ஞான துறை சார்ந்த புலமைத்துவத்தை உண்டாக்கி அதன் மூலம் வருகின்ற புலமைத்துவம் மக்களின் வளர்ச்சிக்கும், சேவைக்கும், பொருளாதார வளர்ச்சிக்கும் உதவக்கூடியதாக இருக்க வேண்டும் என்பதே எமது நோக்கம்.

வருடா வருடம் யாழ்ப்பாண சமூக விஞ்ஞானச் சங்கம், பாடசாலை மத்தியில் பல போட்டிகளை, பல மட்டங்களில் உருவாக்கி நடத்தி வருகின்றன. இன்றைய காலகட்டத்தில் இது தேவையாகும். முக்கியமாக பொருளாதார ரீதியில் முன்னோக்கி செல்ல வேண்டுமானால் விஞ்ஞான துறையில் நாங்கள் வளர்ச்சியடைய வேண்டும்.

இந்த சமூக விஞ்ஞானச் சங்கமானது நிபுணர்களுடன் சேர்ந்தும் பல்கலைக்கழகத்துடன் இணைந்து தான் பணிகளை செய்து வருகிறார்கள். தற்போது நாங்கள் ஒரு திட்டத்தினை கல்வி திணைக்களத்துடன் கதைத்துக்கொண்டிருக்கிறோம். –  என்றார்.

இதுதொடர்பில் சமூக விஞ்ஞானச் சங்கத்தின் தலைவர் தேவநாயகம் தேவானந்த் தெரிவிக்கையில்,

யாழ்ப்பாண சமூக விஞ்ஞானச் சங்கம், அறிவு சார்ந்த விடயங்களோடு தொடர்புடைய சங்கம் என்ற அடிப்படையில் போசாக்கினை மேம்படுத்துவதற்கான ஆலோசனைகளை அல்லது அது தொடர்பான அறிவு சார்ந்த விடயங்களை பகிந்துகொள்ளுவது தான் எங்களுடைய பணியாக இருக்கும்.

உண்மையில் அதனை செயற்படுத்துவது என்பது அரச சார்பற்ற நிறுவனமோ அல்லது அரச நிறுவனமோ சார்ந்த விடயமாக இருக்கும். 

ஆகவே நாங்கள் தற்போது இனங்காணுகின்ற முக்கிய  பிரச்சினை அனைத்து விடயங்களுக்கும் தரவு ரீதியாக, ஆய்வு ரீதியாக எங்களுக்கு என்ன பிரச்சினை இருக்கிறது அதற்கு நாம் எதை செய்யலாம் என்பதான விடயம் போதாமல் இருக்கிறது.

ஆகவே இதனை நிரப்புவதற்குரிய வேலைகளை யாழ்ப்பாண சமூக விஞ்ஞானச் சங்கம் முன்னெடுப்பதற்கான முயற்சிகளை ஏற்கனவே மேற்கொண்டிருக்கிறது அதனை மேலும் நாம் இன்னும் விரிவாக்கலாம்.

எந்தெந்த துறைகள் சார்ந்து ஆய்வுகளை மேற்கொள்ளலாம், அல்லது அந்த துறைகளில் மேலதிக நிலைப்பட்ட ஆலோசனை தேவை  என்பது தொடர்பாக நிறுவனங்களும் கைகோர்க்கின்ற போது மேலும் விரிவாக்கி செல்லக்கூடியதாக இருக்கும்.-  என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *