யாழ் சிறைச்சாலைக்கு வெற்றிப் பதக்கம்!

அகில இலங்கை சிறைச்சாலை திணைக்கள மட்ட பூப்பந்தாட்ட போட்டி நேற்றையதினம் (2022.12.07)  அங்குனுகொலபேலஷ சிறைச்சாலையில் இடம்பெற்றது.

இந்நிலையில் யாழ்ப்பாணம் சிறைச்சாலையும் குறித்த போட்டியில் பங்குபற்றியது.

அந்தவகையில் யாழ். சிறைச்சாலையை பிரதிநித்துவப்படுத்தி பங்குபற்றிய, யாழ். சிறையில் பணிபுரியும் உத்தியோகத்தர் R.நிஷாந் திறந்த தனி வீரர்களுக்கான போட்டியில் முதலிடம் பிடித்து வெற்றிப்பதக்கத்தை தனதாக்கி கொண்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *