இலங்கையில் அடுத்த வருடம் மின்வெட்டு இல்லை – நாட்டிற்கு வரும் 24 கப்பல்கள்! வெளியான மகிழ்ச்சித் தகவல்

அடுத்த ஆண்டு ஜனவரி மற்றும் ஏப்ரல் மாதங்களுக்கு இடையில் மின்சார உற்பத்திக்காக மொத்தம் 24 நிலக்கரி கப்பல்களை இலங்கை பெற உள்ளதாக இலங்கை மின்சார சபையின் தலைவர் நளிந்த இளங்ககோன் தெரிவித்துள்ளார்.

மின்சார உற்பத்திக்கு நிலக்கரி தட்டுப்பாடு ஏற்படாது என இலங்கை மின்சார சபையின் தலைவர் உறுதியளித்துள்ளார்.

மதிப்பீடுகளின்படி, மின் உற்பத்திக்கு வருடாந்தம் 60,000 மெட்ரிக் தொன் நிலக்கரி தேவைப்படுகிறது.

24 கப்பல்களில் 21க்கான கொள்முதல்முன்பதிவுகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும் 12 ஏற்றுமதிகளை கொள்வனவு செய்வதற்கான முன்மொழிவுகள் அமைச்சரவையின் அனுமதியைப் பெறுவதற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

எஞ்சியுள்ள ஐந்தில் ஒரு நிலக்கரி ஏற்றுமதி இன்று நாட்டிற்கு வரும் என இலங்கை மின்சார சபையின் தலைவர் உறுதிப்படுத்தியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *