பலத்த காற்றினால் மரம் முறிந்து வீட்டுக்கு சேதம்!

சீரற்ற கால நிலை காரணமாக திருகோணமலை மாவட்டத்தின் கல்மெடியாவ தெற்கு கிராம சேவகர் பிரிவில் உள்ள வீடொன்றின் மீது மரம் முறிந்து வீழ்ந்ததில் வீட்டின் கூரை சேதமாக்கப்பட்டுள்ளதாக வீட்டு உரிமையாளர் தெரிவிக்கின்றனர். இன்று (09) அதிகாலை வீசிய பலத்த காற்றினால் குறித்த சம்பவம் ஏற்பட்டுள்ளதுடன் உயிர்ச்சேதம் ஏற்படவில்லை. 

தற்போதைய சீரற்ற கால நிலை காரணமாக கடும் குளிரான கால நிலை நிலவுகிறது பலத்த காற்றும் வீசுகின்றமை குறிப்பிடத்தக்கது.
திருமலை கரையோரத்தை பொறுத்தமட்டில் மீனவர்கள் கடலுக்கு செல்ல முடியாது இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது. கடல் தொடர்ந்தும் கொந்தளிப்பாக காணப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *