பதுளை மாவட்டத்தில் லுனுகலை, ஹப்புத்தளை மற்றும் பசறை, உள்ளிட்ட பல பகுதிகளில் பலத்த காற்றினால் இதுவரையில் 723 வீடுகள் பகுதி அளவில் சேதமடைந்துள்ளது என்று பதுளை மாவட்ட முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
அத்துடன் சீரற்ற காலநிலையில் 723 குடும்பங்களை சேர்ந்த 2093 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், என்றும் இதுவரை காலப் பகுதியில் இருவர் உயிரிழந்து உள்ளதாகவும் குறித்த நிலையம் கூறியுள்ளது.