கல்வியை வியாபாரமாக்கும் கொத்தலாவல பல்கலைக்கழக சட்டமூலத்திற்கு எதிராக யாழில் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
யாழ்ப்பாண பல்கலைக்கழகம் முன்பாக இன்று (புதன்னிழமை) மதியம் இந்த அமைதி போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இலவச கல்வித்துறையை பாதுகாக்கவும் விரிவுபடுத்தவும் கல்வித்துறையில் இராணுவ தலையீடுகளை தடுக்க வேண்டியும் கல்வியை தனியார் மயப்படுத்தல் மற்றும் கல்வி நடவடிக்கையில் அரச தலையீடுகள் என்பவற்றை நிறுத்த கோரியே இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
