முல்லைத்தீவு நகரில், பாதிரியார் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
திங்கட்கிழமை (02) உண்ணாப்பிலவு பிரதேச வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின் போது, நேற்று (03) உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
வண்ணாங்குளம் அந்தோனியார் தேவாலய ஞாயிற்றுக்கிழமை பூஜையில் இவர் பங்கேற்றுள்ள நிலையில், பூஜையில் கலந்துகொண்டவர்களை தனிமைப்படுத்தும் நடவடிக்கையில் சுகாதார துறையினர் ஈடுபட்டுள்ளார்கள்.