
சாராபுலஸ்தினியை தேடிக்கண்டுபிடிக்கச் சென்ற சமன்வீரசிங்க என்ற அதிகாரியின் மரணம் இன்றுவரை மர்மமாகவே உள்ளது. இவர் ஓர் முக்கியசாட்சி. உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சாட்சியாக இருக்கும் ஸஹ்ரானின் மனைவிக்குக் கூட இந்நிலைமை ஏற்படலாம். அதனால் ஜனாதிபதி ஸ்கொட்லாந்து யார்ட் பொலிஸாரை விரைவில் அழைத்து வந்து தாக்குதலின் பிரதான சூத்திரதாரியை இனங்கண்டு சட்டத்தின்முன் நிறுத்தவேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் வேண்டிக்கொண்டார்.