மாண்டஸ் புயல் தாக்கம் – கொழும்பு – சென்னை உட்பட பல விமானங்கள் ரத்து!

மாண்டஸ் புயல் கரையைக் கடப்பதை அடுத்து, கொழும்பில் இருந்து சென்னைக்கான விமானம் உட்பட மூன்று சர்வதேச விமானங்களும், 25க்கும் மேற்பட்ட உள்நாட்டு விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

பிரான்ஸின் ரீயூனியனில் கொழும்பு, அபுதாபி ஆகியவற்றுக்கான சர்வதேச விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

அத்துடன் தூத்துக்குடி, கடப்பா, மைசூர், பெங்களூரு, மதுரை, விஜயவாடா, மங்களூரு, காலிகட், ஹூப்ளி, கண்ணூர் மற்றும் திருச்சிராப்பள்ளி ஆகிய இடங்களில் இருந்து இயக்கப்படும் விமானங்களும் நிறுத்தப்பட்டன.

சில விமானங்கள் பெங்களூருக்கு திருப்பி விடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை விமான நிலையக் குழுவினர் மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் சென்னை விமான நிலையத்திற்கு அருகாமையில் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

புதிய ஒருங்கிணைந்த முனையக் கட்டிடம் மற்றும் இதர கட்டிடங்களுக்குள் தண்ணீர் உட்புகாமல் பாதுகாக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் உணர்திறன் கருவிகள் வெள்ளத்தில் மூழ்குவதைத் தவிர்க்க, அடையாறு ஆற்றின் நீர் ஓட்டம் ஒரு மணிநேர அடிப்படையில் தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது.

எனினும் தற்போது, நீர்மட்டம் அதிகபட்ச நீர்வரத்தை விட சுமார் நான்கு மீட்டர் குறைவாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *