32 ஆயிரம் அரச ஊழியர்கள் தொடர்பில் வெளியான தகவல்!

கடந்த காலங்களில் பல துறைகளில் பணிகளுக்காக இணைத்துக் கொள்ளப்பட்ட 32 ஆயிரம்  ஊழியர்களும் அடுத்த வருட ஆரம்பத்தில் அரசாங்க நிரந்த சேவைகள் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர்.  

கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்த காலத்தில் பல துறைகளில் கீழ் இவர்கள் பணிக்காக இணைத்துக் கொள்ளப்பட்டனர். 

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னக்கோன் இது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டார். 

இவர்கள் தற்போது பல்வேறு அரசாங்க நிறுவனங்களில் இணைக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களுக்கு சிறந்த பயிற்சிகள் வழங்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

இவ்வாறு சேர்த்துக்கொள்ளப்பட்ட ஒரு தரப்பினரை வெளிநாட்டுப் பணிகளில் ஈடுபடுத்துவதற்கான அனைத்து திட்டங்களும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாகவும், அவர்கள் வெளிநாடு செல்வதற்கு தேவையான தொழில்திறன் பரீட்சைகளுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *