கிழக்கில் கால் நடைகள் உயிரிழப்பது தொடர்பில் விசேட கவனம்!

கடந்த சில நாட்களாக கிழக்கு மாகாணத்தில் நிலவும் கடும் குளிரான காலநிலை காரணமாக கால்நடைகள் உயிரிழந்துள்ளமை தொடர்பில் மாகாண கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களம் அவதானம் செலுத்தியுள்ளது.

இந்த நிலையில் இருந்து கால்நடைகளை பாதுகாக்கும் வகையில் உடனடியாக சம்பந்தப்பட்ட கால் நடை வளர்ப்பாளர்களுக்கு தெரியப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்தின் மாகாண பணிப்பாளரிடம் கிழக்கு  மாகாண ஆளுநர்  அனுராதா யஹம்பத் உத்தரவிட்டுள்ளார்.
ஊடகங்களுக்கு இன்று (10) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்தும் குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது
குறைந்தபட்ச வசதிகள் ஏதுமின்றி வனப்பகுதிகளில் விலங்குகள் சுதந்திரமாக நடமாடுவதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. 
எனவே, கால்நடைகளுக்கு போதிய உணவு மற்றும் தண்ணீரை வழங்குமாறு கால் நடை வளர்ப்பாளர்களுக்கு அறிவிக்குமாறும், பன்னையை சுற்றியுள்ள கால் நடைகளுக்கு சூடேற்றுவதற்கு தேவையான தீப்பந்தங்களைத் தயாரிக்க நடவடிக்கை எடுக்குமாறும் மாகாணப் பணிப்பாளரிடம் ஆளுநர் தெரிவித்தார்.
கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டும் 256 மாடுகள் உயிரிழந்துள்ளதாக மாகாண கால் நடைகள் சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளை, கடுமையான குளிர் காலநிலை காரணமாக திருகோணமலை மாவட்டத்தில் 210 பசுக்களும், அம்பாறை மாவட்டத்தில் 16 பசுக்களும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், இந்த நேரத்தில் கடுமையான குளிர் காலநிலை முடிவடைந்துள்ளது மற்றும் விவசாயிகள் அந்த கால் நடைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த முடிந்தது என்று கால் நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
கால்நடைகளுக்குத் தேவையான வசதிகளை செய்து கொடுக்காமல், கால்நடைகளை சுதந்திரமாக நடமாட அனுமதிக்கும் விவசாயிகளைக் கையாள்வதற்குத் தேவையான நடவடிக்கைகளை ஆராயுமாறும் மாகாண பணிப்பாளருக்கு ஆளுநர் உத்தரவிட்டுள்ளார்.
மேலும், இதுபோன்ற கால் நடை வளர்ப்பாளர்கள் குறித்து பொலிஸில் முறையிட்டால் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், பொலிஸார் மூலம் அபராதம் விதிக்கப்படும் என்றும் ஆளுநர் உத்தரவிட்டார்.
நீண்டகாலமாக காடுகளில் திரியும் இந்த கால்நடைகளின் வசதிகளை கண்டறிந்து அவற்றிலிருந்து நிலையான பால்பண்ணை மூலம் பெறப்படும் பால் பொருட்களின் தரத்தை உயர்த்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக மாகாணத்தில் ஆளுநர் பல விசேட திட்டங்களை ஆரம்பித்தமையே காரணம். இந்த கால்நடை வளங்களை பாதுகாப்பதே பசு திட்டம் எனவும் குறித்த அறிக்கையில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *