சந்தையில் சமையல் எரிவாயு தட்டுப்பாடு: நுகர்வோர் அசௌகரியம்

இலங்கையில் நிலவும் டொலர் பற்றாக்குறை காரணமாக லாஃப்ஸ் நிறுவனம் எரிவாயு இறக்குமதியை மட்டுப்படுத்துவதற்கு தீர்மானித்துள்ளமையை அடுத்து நாடு முழுவதும் எரிவாயு தட்டுப்பாடு நிலவுகின்றது.

மேலும் இதன் காரணமாக மாற்று வழிகள் இன்றி நுகர்வோர் பாரிய அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர்.

அத்தோடு சர்வதேச சந்தையில் எரிவாயுவின் விலை அதிகரித்தமையை அடுத்து இலங்கையில் பல்வேறு சந்தர்ப்பங்களில் எரிவாயு விலையை அதிகரிக்குமாறு எரிவாயு நிறுவனங்கள் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்திருந்தன. எனினும் அதற்கான அனுமதி வழங்கப்படவில்லை.

இதேவேளை, டொலர் பற்றாக்குறை நிலவுகின்ற நிலையில் கடன் உறுதி கடிதத்தை திறப்பதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளமையினால் லாஃப்ஸ் எரிவாயு நிறுவனம் இறக்குமதி செய்வதில் பிரச்சினையை எதிர்நோக்கியுள்ளதாக அறிவித்துள்ளது.

மேலும் இதற்கு பதிலளிக்கும் வகையில் லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் அரசாங்க தகவல் திணைக்களத்தின் ஊடாக ஜூலை 20 ஆஅறிவிப்பு ஒன்றினை விடுத்திருந்தார்.

அத்தோடு லாஃப்ஸ் நிறுவனம் எரிவாயு இறக்குமதியை நிறுத்துவதற்கு தீர்மானித்தால் அதற்கான கேள்வியை நிரப்புவதற்கு லிட்ரோ நிறுவனத்திற்கு முடியுமென குறித்த அறிவிப்பில் அவர் தெரிவித்துள்ளார்.

எனினும், லாஃப் எரிவாயுக்கு பதிலாக லிட்ரோ எரிவாயு கொள்கலனை விநியோகிக்குமாறு நிறுவனத்திடமிருந்து தமக்கு அறிவிக்கவில்லையென லிட்ரோ விநியோக முகவர்கள் தெரிவிக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *