28 வயது இளைஞருடன் காதல் சிக்கிய 300 பெண்கள் இழந்த கோடிக்கணக்கான பணம்!

இந்தியாவில் 28 வயதான இளைஞர் ஒருவர் 300 பெண்களை ஏமாற்றி சீரழித்து, நகை, பணம் பறித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம், கடப்பா மாவட்டம் புரோதட்டூர் சென்னுப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் பிரசன்னகுமார் என்கிற ராஜா(28).

பொறியியல் படிப்பு படித்துவந்த இவர் பாதியிலேயே படிப்பினை நிறுத்திவிட்டு, வழிப்பறி, திருட்டு என குற்ற செயல்களில் ஈடுபட்டு சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்துள்ளார்.

Advertisement

ராஜா கடந்த 2017ம் ஆண்டு திருட்டு வழக்கில் சிறைக்கு சென்று விடுதலை ஆனார். அதேபோல், கடந்த மாதம் 29ம் தேதி திருட்டு வழக்கில் ராஜாவை பொலிசார் மீண்டும் கைது செய்துள்ளனர்.

அப்பொழுது விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆம் இந்த குற்ற செயல்கள் மட்டுமின்றி சமூகவலைத்தளங்களில் பெண்களை காதல் வலையில் வீழ்த்தி, அவர்களிடம் ஆபாச படங்களை பெற்றுக்கொண்டு மிரட்டியும் பணம் பறித்துள்ளார்.

குறித்த பெண்களும் காதலன் தானே என்று நினைத்து அந்தரங்கு புகைப்படங்களையும் அனுப்பி வைத்ததால் இறுதியில் பாரிய சிக்கலில் மாட்டியுள்ளனர்.

கடப்பா, விஜயவாடா, ஐதராபாத் உட்பட பல்வேறு நகரங்களில் உள்ள சுமார் 300-க்கும் மேற்பட்ட திருமணம் ஆன பெண்கள் முதல் இளம் பெண்கள் வரை என காதல் வலையில் வீழ்த்தியுள்ளது தற்போது தெரியவந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *