நல்லிணக்கத்திற்கான சர்வகட்சி மாநாடு ஆரம்பம்!

நல்லிணக்கத்திற்கான சர்வகட்சி மாநாடு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் ஆரம்பமாகியுள்ளது.

ஜனாதிபதி செயலகத்தில் குறித்த மாநாடு இன்று (13) மாலை தொடக்கம் இடம்பெற்று வருவதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதன்போது பிரதமர், சபாநாயகர், எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சித் தலைவர்களும் கலந்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *