கொட்டகலையில் எரிவாயு அடுப்பு வெடிப்பு சம்பவம் பதிவு!

திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொட்டகலை டிரேட்டன் தோட்டம் கே.ஓ பிரிவில் உள்ள வீடு ஒன்றில்  எரிவாயு அடுப்பு ஒன்று வெடித்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

இந்த சம்பவம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 6 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக திம்புள்ள பத்தனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தேநீர் தயாரிப்பதற்காக எரிவாயு அடுப்பை பற்ற வைத்துள்ளனர். 5 நிமிடங்களுக்கு பிறகு  அடுப்பு வெடிப்பு ஏற்பட்டுள்ளதாக  வீட்டின் உரிமையாளர் தெரிவித்தனர்.

வெடிப்பை அடுத்து  எரிவாயு அடுப்பு முழுமையாக சேதமமைந்துள்ளதுடன், அதன்பின்னர்  எரிவாயு சிலிண்டர் உள்ளிட்ட உபகரணங்களை அகற்ற நடவடிக்கை எடுத்தாக வீட்டாளர்கள் மேலும் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் திம்புள்ள பத்தனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *