வலி. மேற்கு பிரதேச சபையின் உறுப்பினர் கந்தையா இலங்கேஷ்வரன், தனது சொந்த நிதியிலிருந்து வீதி விளக்குகளை பொறுத்தியுள்ளார்.
வலி. மேற்கு பிரதேச சபையின் 13ஆம் வட்டாரத்திற்குள் உள்ளடங்கும் அராலி மேற்கு மற்றும் அராலி மத்தி பகுதிகளில் இவ்வாறு பத்து வீதி விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன.
மழை இருட்டினால் வீதியால் பயணிக்கும் மக்கள் பல்வேறு இன்னல்களை எதிர்நோக்கி வந்த நிலையில், இதையறிந்த பிரதேச சபையின் உறுப்பினரால் குறித்த வீதி விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


