சிங்கப்பூர் பறந்தார் ஜனாதிபதி கோட்டா… மஹிந்த தலைமையில் கூடுகின்றது அமைச்சரவை!

தனிப்பட்ட விஜயம் ஒன்றினை மேற்கொண்டு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று (திங்கட்கிழமை) அதிகாலை சிங்கப்பூர் சென்றுள்ளார்.

ஜனாதிபதியின் விஜயத்திற்கான நோக்கத்தை வெளிப்படுத்த முடியாது என ஜனாதிபதியின் ஊடகப் பேச்சாளர் கிங்ஸ்லி ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இருப்பினும் சில நாட்கள் அங்கு மருத்துவ சிகிச்சைக்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அங்கு தங்கியிருக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் இன்று பிற்பகல் நடைபெறவுள்ள அமைச்சரவைக் கூட்டம் ஜனாதிபதி இன்றி பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நடைபெறவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *