அவுஸ்ரேலியா அணிக்கெதிரான இரண்டாவது ரி-20: பங்களாதேஷ் அணி 5 விக்கெட்டுகளால் வெற்றி!

அவுஸ்ரேலியா அணிக்கெதிரான இரண்டாவது ரி-20 போட்டியில், பங்களாதேஷ் கிரிக்கெட் அணி 5 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றுள்ளது.

இந்த வெற்றியின் மூலம் ஐந்து போட்டிகள் கொண்ட ரி-20 தொடரில் 2-0 என்ற கணக்கில் பங்களாதேஷ் அணி முன்னிலைப் பெற்றுள்ளது.

டாக்கா மைதானத்தில் நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற அவுஸ்ரேலியா அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானிதது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்ரேலியா அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 121 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, மிட்செல் மார்ஷ் 45 ஓட்டங்களையும் ஹென்ரிக்ஸ் 30 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், முஷ்டபிசுர் ரஹ்மான் 3 விக்கெட்டுகளையும், சொரிபுல் இஸ்லாம் 2 விக்கெட்டுகளையும் மெயிடி ஹசன் மற்றும் சகிப் அல் ஹசன் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதனைத்தொடர்ந்து 122 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய பங்களாதேஷ் அணி, 18.4 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு வெற்றி இலக்கை கடந்தது. இதனால் அந்த அணி 5 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றது.

இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, அபீப் ஹொசைன் ஆட்டமிழக்காது 37 ஓட்டங்களையும் சகிப் அல் ஹசன் 26 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

அவுஸ்ரேலிய அணியின் பந்துவீச்சில், மிட்செல் ஸ்டாக், ஜோஸ் ஹசில்வுட், அஸ்டன் அகர், அடம் ஸெம்பா மற்றும் ஹென்ரிவ் டை ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக 31 பந்துகளில் 1 சிக்ஸர் 5 பவுண்ரிகள் அடங்களாக ஆட்டமிழக்காது 37 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட அபீப் ஹொசைன் தெரிவுசெய்யப்பட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *