சிறுவர்களை நீதிமன்றுக்கு அழைக்காமல் இருக்க நடவடிக்கை

மேல் நீதிமன்றங்களில் விசாரணைகளுக்கு எடுக்கப்படும் சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பான வழக்குகளுக்காக பிறிதொரு தினத்தை ஒதுக்குவதற்கு நீதி சேவைகள் ஆணைக்குழுவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் முடிவொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் தலைவர் முதித விதானபத்திரன தெரிவித்துள்ளார்.

குறித்த தினத்தில் சிறுவர் தொடர்பான வழக்குகளுக்கு முன்னுரிமையளித்தல், அவ்வாறான வழக்குகளை அடையாளம் காண்பதற்கான முறைமைகளை உருவாக்குதல் உள்ளிட்ட விடயங்கள் அடங்கிய சுற்றறிக்கை நீதி சேவைகள் ஆணைக்குழுவினால் சகல மேல் நீதிமன்ற நீதிபதிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட சிறுவர்களை நீதிமன்றத்திற்கு அழைக்காமல் வேறு இடங்களில் வைத்து தொலைக் காணொளி ஊடாக சாட்சிகளை பதிவு செய்வதற்காக மத்திய நிலையங்களை அமைக்க அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.

இதன்படி, சகல மாகாணங்களிலும் மத்திய நிலையங்கள் அமைக்கப்படவுள்ளது.

கடந்த மாதத்தில் மாத்திரம் சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பில் 4 ஆயிரத்து 740 முறைப்பாடுகள் சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையில் முன்வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *