பண்டாரவளை பூனாகலையில் உள்ள பாடசாலை ஒன்றின் ஆசிரியர் ஒருவர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட மூன்று சந்தேகம் நபர்களையும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
குறித்த சந்தேக நபர்கள் நேற்று பண்டாரவளை நீதவான் நீதிமன்றத்தின் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
இதன்போது சந்தேக நபர்களை 23ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை பாடசாலையில் வைத்து சிலரால் தாக்கப்பட்டதாக கூறப்படும் ஆசிரியர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
இதனை அடுத்து போலீஸ் நிலையத்தில் வழங்கப்பட்ட முறைப்பாட்டை அடுத்து முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் மூன்று சந்தேகம் நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
