பேஸ்புக் உட்பட சமூக வலைத்தளங்கள் மற்றும் இணையத்தளங்களை கண்காணிப்பு செய்வதற்கான முறை அவசியம் என தொழில் அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா தெரிவித்துள்ளார்.
இன்று (05) இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் சீனாவில் சமூக வலைத்தளங்கள் தடை செய்யப்பட்டிருப்பதையும் அவர் சபையில் சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.