
“வரலாற்றை முதலில் பதிவு செய்பவர்கள் ஊடகவியலாளர்கள்” என்கிறார் பிரபல அமெரிக்க ஊடகவியலாளர் பிலிப் எல். க்ரஹம். சமகால நிகழ்வுகளை செய்திகளாக்கி சமூகத்திற்கு உண்மைகளை எடுத்துச் செல்பவர்கள் ஊடகவியலாளர்களாவர். இவர்கள் வாழும் போதும் மட்டுமன்றி மறைந்த பின்னரும் மக்கள் மனதில் வாழ்பவர்களாவர் என்பதில் ஐயமில்லை.